Wednesday, January 14, 2015

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

தைப்பொங்கல் தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. 

தமிழர் திருநாளாக தமிழ்நாடுஇலங்கைமலேசியாசிங்கப்பூர்ஐரோப்பிய நாடுகள் என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து, அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. 

பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.

தைப்பொங்கல்


இயற்கையோடு இணைந்த வாழ்க்கை எங்கள் வாழ்க்கை...
இயற்கையை பாதுகாத்து முடிந்தவரை இயற்கைக்கு திரும்புவோம் என்று உறுதியோடு...

அனைவருக்கும் எமது மனமார்ந்த தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்

Image Courtesy: google



No comments:

Post a Comment